April 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரேநாளில் 20,952 பேருக்கு புதிதாக கொரோனா; 122 பேர் பலி

1 min read

Corona for 20,952 new people in one day in Tamil Nadu; 122 killed

3/5/2021

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 20,952 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உ்ள்ளது. நேற்ற மட்டும் 122 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,23,258 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கியவர்களில் இன்று ஒரே நாளில் 18,016 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

122 பேர் சாவு

கொரோன வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 6,150 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.