June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாட்டி வழியில் பேரன் ஜோதிர் ஆதித்யா

1 min read

India Economic Summit 2009

Jyotir Aditya is the grandson on the way to the grandmother

12.3.2020

இந்திய அரண்மனைகளில் மட்டுமே புழக்கத்தில்இருந்த ராஜமாதா என்கிற வார்த்தையை இந்திய அரசியலில் ஒலிக்க வைத்தவர் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் ராஜ வம்சத்தில் பிறந்து மகாராணியாக வாழ்ந்து பிஜேபியில் ராஜ மாதா என்கிற அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்த விஜய ராஜே சிந்தியாதான்.
பிஜேபியில் ராஜமாதா என்று அழைக்கப்பட்ட விஜய ராஜே சிந்தியா பிஜேபியின் தாய் இயக்கமான ஜனசங்கம் காலத்தில் இருந்தே இந்துத்வா சிந்தனையுடன் மத்திய பிரதேசத்தில் இயங்கி காங்கிரஸ்க்கு எதிராக மாற்று அரசியல் உருவாக துணை நின்றவர்.

மத்திய பிரதேசத்தில் ஜனசங்கம் மற்றும் பிஜேபியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருந்தவர் ராஜமாதா விஜய ராஜே சிந்தியா தான். தன்னுடைய மகன் மாதராவ் சிந்தியாவை ஜனசங்கத்தில் இணைய வைத்து மத்திய பிரதேசத்தில் இந்துத்வா அரசியல் வளர துணை நின்றார்.

மாதராவ் சிந்தியாவை மட்டுமல்ல தன்னுடைய 2 மகள்களையும் வசந்தரா ராஜே சிந்தியாவை ராஜஸ்தான் பிஜேபி யிலும், யசோதரா ராஜே சிந்தியாவை மத்திய பிரதேச பிஜேபி யிலும் இணைய வைத்து பிஜேபி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ராஜமாதா.

1971 ல் லோக்சபா தேர்தலில் ஜன சங்கம் சார்பாக பிந்த் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற ராஜமாதா குவாலியர் தொகுதியில் வாஜ்பாய் அவர்களையும், குனா தொகுதியில் மாதராவ் சிந்தியாவையும் தன்னுடைய செல்வாக்கினால் வெற்றி பெற வைத்தார்.

மாதராவ் சிந்தியா சில காலங்கள் மட்டுமே ஜனசங்கத்தில் இருந்தார். பிறகு காங்கிரஸ் பக்கமாக சென்று விட்டார். அதனால் தான் மாதராவ் சிந்தியாவின் மறைவுக்கு பிறகு ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார்.

எப்படி பிரதமர் பதவி மாதராவ் சிந்தியாவுக்கு தர விடாமல் சோனியா கேம் ஆடினாரோ அதே மாதிரி 2018 மத்திய பிரதேச தேர்தலில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா முதல்வராக வருவார்
என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் வழக்கம் போல காங்கிரஸ் மேலிடம் கேம் ஆடி ராகுலுக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்று ஆதித்யாவை ஓரங்கட்டி விட்டு கமல்நாத்தை முதல்வராக கொண்டு வந்தது.

அப்பொழுதே ஜோதிர் ஆதித்யா வருத்தத்தில் தான் இருந்தார். சரியான நேரத்திற்காக காத்து இருந்தார். அவருடைய தந்தையின் 75 வது பிறந்த நாள் அன்று அவருடைய தந்தையின் வீழ்ச்சிக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி தன்னுடைய பாட்டி
வளர்த்த தேசியவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இதுவரை தந்தை வழியில் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்த ஜோதிர் ஆதித்யா இப்பொழுது அதில் இருந்து விலகி தன்னுடைய பாட்டியான ராஜமாதா காட்டிய வழியில் பயணிக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.