July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்த முதியவர் சாவு; இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

1 min read
Seithi Saral featured Image

One Death affected by corona in Maharastra; Death toll rises to 3 in India

17/3/2020

மராட்டிய மாநிலத்தில் கொரோன பாதித்த முதியவர் ஒருவர் இறந்தார். அந்த மாநிலத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா
சீனாவில் உருவான கொரானா ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியது.
இந்தயாவுக்குள்ளும் இந்த வைரஸ் பரவியது. மராட்டிய மாநிலம் மும்பையில், கொரோனாவைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாபாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவர் துபை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கர்நாடகத்தில் ஒருவரும், டெல்லியில் ஒருவரும் என இரு முதியவர்கள் பலியான நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மராட்டியத்தில் மேலும் ஒரு முதியவர் பலியாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 120க்கும் அதிகமானோர் கொரோனாபாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். ஏராளமானோர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் மேலும் இருவருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.