கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் தீக்குளிப்பு
1 min read
19.3.2020
திருச்செந்தூர் அருகேயுள்ள சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்த பரிபூரணதாஸ் மகன் பீட்டர். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரும், உறவினரான பிஎட் மாணவி செல்வலட்சுமி(22) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்ற பீட்டர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் கர்ப்பமான செல்வலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது பீட்டர் மறுத்து வந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த மாணவி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரேமா, பீட்டர் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தார். இதையறிந்த பீட்டர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.