June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

4 பேரின் தூக்கு தண்டனை காம கொடூரர்களுக்கு பாடம்

1 min read


The death sentence of 4 people is a lesson for lusters

20/3/2020

நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 பேருக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை மற்ற காம கொடூரர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

தூக்கு தண்டனை

தூக்கு தண்டனையே வேண்டாம் என்று சொல்லும் சில அரசியில் கட்சியினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கூறினார்கள். அந்த அளவுக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பாலியல் பலாத்காரம் மட்டுமல்ல… அதன்பின் நடந்த வன் கொடுமை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.
தண்டனை என்பது சம்பந்தப்பட்ட குற்றவாளி திருந்தும் வகையில் அமைய வேண்டும். அப்படி இருக்கையில் தூக்கு தண்டனை என்பது அவர்களை கொன்ற பின்னர் அவர்கள் எப்படி திருந்துவார்கள் என்று கேட்கலாம். மற்ற தண்டனை எல்லாம் திருந்துவதற்கு என்றால் தூக்கு தண்டனை மட்டும் மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்கு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் நாட்டை கெடுக்கும் பயங்கர வாதிகளுக்கு விதிக்கப்படும் தூக்கு தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக மட்டுமல்லாது அந்த பயங்கரவாதத்தை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கும் அமையும்.
அந்த மிக கொடூர நிகழ்வுக்கு தூக்கு தண்டனை வேண்டியதுதான்.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் வெளியே வர எத்தனையோ முயற்சிகளை சட்டத்தின் மூலம் முயற்சி செய்தனர். அவர்கள் சிறையி் இருந்து நாட்களில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டுதான் இருந்தார்கள். சாதாரணமாக பார்த்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வரலாம். ஆனால் அவர்கள் செய்த கொடூரத்தை நினைத்துப் பார்த்தால் இந்த தண்டனை தாமதமாக வழங்கப்பட்டதாக நினைக்க தோன்றும்.
அதனால்தான் பல என்கவுண்டர்களை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். இனி இவன் திருந்தவே மாட்டான் என்ற நிலையில் போலீசார் எடுக்கும் என்கவுண்டர்களை பொதுமக்கள் என்றும் வரவேற்கத்தான் செய்வார்கள்.
தாமதமானது, ஆனால் மறுக்கப்படவில்லை என்று நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டம்

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டதை அடுத்து டெல்லி திகார் சிறைக்கு வெளியே பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஏராளமான மக்கள் தேசியக் கொடிகளை கையில் ஏந்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாயார் பேட்டி

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர். இன்று எங்களுக்கு நீதி கிடைத்தது. நீதி தாமதமானது, ஆனால் மறுக்கப்படவில்லை. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

அரசுக்கும், நீதித்துறைக்கும் நன்றி. என் மகளுடைய புகைப்படத்தை கட்டிப்பிடித்து, உனக்கு நீதி கிடைத்துவிட்டது என கூறினேன். என் மகள் திரும்பி வரப்போவது இல்லை, ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்காகவும் எனது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.