June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

1 min read
Seithi Saral featured Image

Coronal death toll rises to 5 in Tamil Nadu

5/4/2020
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

சீனாவில் உருவான கொரோனா இந்தியாவில் நுழைபும்போது தமிழகத்தில் பாதிப்பு அவ்வளவாக தெரியில்லை. ஆனால் போகப்பபோக இங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் முதன்முதலில் மதுரையைச் சேர்ந்த ஆண் ஒருவர் இறந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் கடந்த 26-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 54 .
இதையடுத்து, டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்குச்சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 51-வயது ஆசிரியர் நேற்று காலை 7.45 மணியளவில் உயிரிழந்தார். இதேபோல் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.

5 ஆக உயர்வு

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் .
துபையில் இருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 61 வயதுள்ள ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.