June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

1 min read
Seithi Saral featured Image

Coroner’s suicide attempt in Delhi

5/4/2020

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்ய 3-வது மாடியில் இருந்து குதித்தார்.

கொரோனா பாதிப்பு

இந்தியால் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 3,072 போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரே நாளில் நேற்று(சனிக்கிழமை) மட்டும் 525 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மராட்டியத்தில் 490 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 445 பேரும், தமிழகத்தில் 485 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 75 போ் பலியாகியுள்ளனா். 212 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை முயற்சியில் இறங்கினார். அவர் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.