June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு

1 min read
Seithi Saral featured Image
Sudden death of a woman treated at Corona Ward

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த 52 வயது பெண் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்நிலையில், அந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவர் நிமோனியா காய்ச்சல் பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் தெரிகிறது. ஆய்வு முடிவுகள் வராத காரணத்தினால் அவர் கொரோனா காரணமாக இறந்தாரா என உறுதி செய்ய முடியவில்லை.

தமிழகம் முழுவதும் கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ள நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. இது தவிர, பலர் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பினால் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வார்டில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.