June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சாலைகளில் வீசப்படும் முகக் கவசங்களால் தொற்று நோய் பரவும் அபாயம்

1 min read
Seithi Saral featured Image
Risk of infection through face mask on the road

சாலைகளில் வீசப்படும் முகக்கவசங்களால் தொற்று நோய் பரவும் அபாயம்

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை சாலைகளில் வீசி விட்டுச் செல்வதால் தொற்று நோய் பரவு அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் கிருமி தாக்குதலையடுத்து பாதிக்கப்பட்டவரிடமிருந்து தங்களைப் பாதுகாக்க பெரும்பாலான மக்கள் முகக் கவசங்களை வாங்கி அணிந்து வருகின்றனர்.

ஒரு முகக்கவசத்தை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதற்குப் பின் பயன்படுத்திய முகக்கவசத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சந்தைக்குச் செல்பவர்கள் மற்றும் வெளியில் செல்லும் சிலர், தாங்கள் பயன்படுத்திய முகக்கவசத்தை பொது வெளியில் தூக்கி வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இதனால் அதனை நுகர்ந்து பார்க்கும் மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலம் வேறு ஏதேனும் தொற்று பரவக் கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே பயன்படுத்திய முகக்கவசங்களை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.