கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்; பில்கேட்ஸ் பேட்டி
1 min read
Cooperation between world countries to control corona; Interview with Billgates
10/4/2020
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
பில்கேட்ஸ்
அமெரிக்காவின் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிதியத்தின் தலைவர் பில்கேட்ஸ் கொரோன தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கி உள்ளார். அவர் நேற்று (வியாழக்கிழமை) சீன ஊடகக் குழுமத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சாதனை, தடுப்பூசிக்கான ஆய்வு உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
உ ஹான் நகரில் போக்குவரத்து முடக்கம் ஏப்ரல் 8-ந் தேதி நீக்கப்பட்டது. கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்துள்ளனர். அதனால், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி பெரும் முன்னேற்றம் பெற்றுள்ளது. இப்போது, சீனாவில் பணி மற்றும் உற்பத்தி செயல்கள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சீனா மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கி வருகின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிக்கு இது முக்கியப் பங்காற்றும்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நா டுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்காலத்தில் கொள்ளை நோய் தடுப்பு, காலநிலை மாற்றம் முதலியவற்றைச் சமாளிக்க முடியாது.
தடுப்பூசி
மேலும், உலகளவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆற்றல் மிகு பணியாளர்கள், தடுப்பூசி, மருந்து ஆகியவை நமக்குத் தேவை. குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சேவையளிக்கக் கூடாது. முழு உலகத்தின் முழுவதின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் கொரோனா வைரசால் வறுமை நிலையில் உள்ள நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை முன்னேற்றி, ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான ஒத்துழைப்பில், சீனா மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.