ஊரடங்கு உத்தரவால் டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு
1 min read
ஊரடங்கு உத்தரவால் “டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு”
ஊரடங்கு உத்தரவால், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால், டிவி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, நீல்சன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,இந்தியாவில் மார்ச் 28ஆம்தேதி அன்று தொடங்கிய வாரத்தில், தொலைக்காட்சி பார்ப்பது 43 % அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் இது 44 % அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனில் இதிகாச தொடர்கள் மீண்டும் ஓளிபரப்பு தொடங்கிய பின், இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் தொலைக்காட்சி சேனலாக, அது மாறியுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி அன்று தொடங்கிய வாரத்தில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் செய்திகளை பார்ப்பது அதிகமாக இருந்தது.
மிக முக்கியமான பழைய மேட்சுகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதால், விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பது 21% அதிகரித்துள்ளது.பிரைம் டைம் அல்லாத நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது 43 சதவீதமும், பிரைம் டைம்மில் 11 சதவீதமும் அதிகரித்துள்ளது..திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 77 சதவீதமும், தமிழகத்தில் 89 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவபர்களின் விகிதம் மார்ச் 21 அன்று தொடங்கிய வாரத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் சராசரி அளவு, தினமும் 3.24 மணி நேரத்தில் இருந்து 3.48 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்துவது 4 % அதிகரித்து 77 சதவீதத்தை எட்டியுள்ளது.வீடியோ ஆன் டிமாண்ட் எனப்படும் இணையம் மூலம் தொடர்கள், படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 97 % அதிகரித்துள்ளது.சராசரியாக ஒரு பயனாளி, இவற்றை பார்க்கும் நேரம் 12 % அதிகரித்து வாரத்திற்கு 3.59 மணி நேரத்தை எட்டியுள்ளது.
ஸ்மார்ட் போன்களில், மூன்று அல்லது அதற்கும் அதிகமான விளையாட்டு செயலிகள் வைத்திருப்பவர்கள், இவற்றை பயன்படுத்துவது 40 % அதிகரித்துள்ளதாக, நீல்சன் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.