பட வாய்ப்புக்காக திருமணத்தை நிறுத்திய நடிகை
1 min read
பட வாய்ப்பில்லாமல் நீண்டகாலமாக சினிமா பக்கம் வராமல் இருந்த நாயகிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் மாப்பிள்ளையை கழட்டி விட்டாராம் அந்த பிரபல நடிகை.
கிராமத்து படங்களில் நடிப்பதற்கு என்றே தமிழ் சினிமாவில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர் அந்த பிரபல ஹீரோ. அவரின் படத்தில் தான் முதல் முறையாக அறிமுகமானார் அந்த கொழுக் மொழுக் நாயகி.
படம் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிராமத்து படங்களில் தலைகாட்டி வந்தார். அதுமட்டுமல்லாமல் காஞ்ச மாடு கம்பில் புகுந்ததை போல நடிகை எப்போது முத்தக்காட்சிக்கு ஓகே சொன்னாரோ தொடர்ந்து இரண்டு படங்களில் இரண்டு ஹீரோக்கள் உதட்டோடு உதடு உறிஞ்சி எடுத்து விட்டனர்.
அதிலும் அந்த உயரமான நடிகர் உதட்டையே பிச்சி விட்டார் என்று கூட சொல்லலாம். அதன் பிறகு இளம் நடிப்பின் நாயகன் ஆக விளங்கிவரும் நடிகரின் படத்தில் கடைசியாக நடித்தார். அந்த படத்தில் உடல் எடை கூடி பார்ப்பதற்கே ஒரு ஆணைப் போல் மாறி விட்டார் அந்த பிரபல நாயகி.
அதன் பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் எதுவும் ரிலீஸ் ஆகுற மாதிரி தெரியவில்லை. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் யாருமே அம்மணியை கண்டுக்கவே இல்லை. அதனால அம்மணி ஒருவழியாக டிகிரி முடித்து விட்டார்.
இனிமேலும் பட வாய்ப்புகளுக்கு வாய்ப்பில்லை என திருமணத்திற்கு ஓகே சொல்ல நாயகிக்கு திடுதிப்பென சாதிவெறி இயக்குனர் படத்தில் இருந்து வாய்ப்பு வந்துள்ளதாம். அதனால் பாவம் அந்த மாப்பிள்ளையை கழட்டிவிட்டு தற்போது மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் அந்த நாயகி.
ஆனால் அம்மணி இரண்டு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு உயரமான நடிகர் ஒருவரின் டார்ச்சல் தான் காரணம் எனவும் அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தது. எது எப்படியோ சட்டியில் குழம்பு இருக்கும்போதே கரண்டி போட்டு அள்ளி விட வேண்டும் என வந்த வாய்ப்பை அள்ளி போட்டுக் கொண்டாராம் அந்த நாயகி.