நாம் சாப்பிடுவது உண்மையில் ஐஸ்கிரீம் தானா?
1 min read
நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீம் தானா? உண்மை தெரிஞ்சா சாப்பிட மாட்டீங்க…
ரசாயனம் கலந்த ஐஸ்கிரீமில் உள்ள ஆபத்தை அறிந்தால், ஐஸ்கிரீம் பக்கமே தலை வைக்க மாட்டோம். ஐஸ்கிரீமில், பழ வாசனையை ஏற்படுத்த, ‘அசிட்டால் டிஹைடு’ என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இது, புற்றுநோய் ஊக்கியாக மாறும் தன்மை கொண்டது. மேலும், நச்சாகவும் வாய்ப்புண்டு; உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, பார்கின்சன் பாதிப்பு ஏற்படும். ஐஸ்கிரீம் உறைந்து போகாமல் இருப்பதற்காக கலக்கப்படும், ‘அமைல் அசிட்டேட்’ என்ற ரசாயனம் ரப்பர், சிமென்ட், பெயின்ட் மற்றும் தின்னர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருளாகும்.
ஈதல் அசிட்டேட் என்ற ரசாயனம் – பைனாப்பிள், பென்சில் அசிட்டேட் – ஸ்ட்ராபெர்ரி, பைப்ரினால் – வெண்ணிலா போன்ற சுவைகளை வழங்கக்கூடியது.
இத்துடன், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, ‘பொட்டாசியம் சோர்பேட்’ என்ற ரசாயனமும் சேர்க்கப்படுகிறது. இதுவும் புற்றுநோய் ஊக்கியாகும். இது, டி.என்.ஏ.,வில் கலந்து, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
நீர்த்த நிலையில் இருக்கும் திரவத்தை, கூழாக மாற்ற, பாலி சோர்பேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது, சோப்பு, ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது.
சோள சர்க்கரை சாறு, அதிக இனிப்பு தன்மையை கொடுப்பதோடு, சர்க்கரை நோயை உண்டாக்கும். குழந்தைகளிடம் நடத்தை மாற்றுப் பிரச்னையையும் ஏற்படுத்தும். சுவைக்காக சேர்க்கப்படும் வனஸ்பதி, கவர்ச்சியான நிறத்தை கொடுக்க சேர்க்கப்படும் பல செயற்கை நிறமிகள் ஆகியவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை.
அடுத்த முறை, உங்கள் குழந்தை ஐஸ்கிரீம் கேட்கும் போது, சற்று யோசித்து முடிவெடுங்கள். வீட்டிலேயே சிறுதானியங்களிலிருந்து பல விதமான ஐஸ்கிரீம்கள் செய்து, சாப்பிட்டு, உடல் நலத்தை காத்துக் கொள்ளுங்கள்.
மாற்றம் என்பது…
சொல் அல்ல, செயல்..!