ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவரை தோளில் சுமந்து சென்ற மகன்
1 min read
Son carrying elderly man from hospital
16/4/2020
கேரளாவில் ஊரடங்கால் உடல் நலம்பாதிக்கப் பட்டு குணம் அடைந்த முதியவரை அவருடைய மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தபடி வீட்டுக்கு வந்தார்.
ஊரடங்கு
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேராளவிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஆட்டோக்களும் ஓடவில்லை.
இந்த நிலையில் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணம் அடைந்ததை அடுத்து அவரை வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து அவரை, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவை அழைத்து வந்தனர். அவரை ஏற்றிக் கொண்டு ஆட்ரோ சென்றது. ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தற்கு முன்பாகவே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஊரடங்கு இருப்பதால் இதற்கு மேல் ஆட்டோ செல்ல அனுமதிக்க முடியாது என கூறினர்.
தோளில் சுமந்து சென்ற மகன்
அந்த முதியவரால் நடந்து செல்ல முடியாது. இதனால் 65 வயதுடைய தந்தையை அவரது மகன தோளில் சுமந்தபடி வீட்டிற்கு சென்றார். ஒரு கிலோ மீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்தே வீட்டிற்கு வந்தார். அப்போது வயதான அவரது தாயாரும் நடந்தே அவர்களுடன் நடந்தே வீட்டிற்கு வந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவர்களின் அனுமதி கடிதத்தோடு அந்த முதியவரை வீடுவரை கொண்டு செல்ல வழிவகை செய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் செல்ல எப்படி விதிவிலக்கு உண்டோ அதேபோல் குணமானவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குச் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும்.
வழக்குப்பதவு
கேரளாவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.