June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நிதித்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு – தமிழக அரசு உத்தரவு

1 min read
A group of 18 people headed by the Finance Secretary – Government of Tamil Nadu

17.4.2020

பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்க நிதித்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு – தமிழக அரசு அமைத்து உத்தரவு

வரும் 20 ஆம் தேதிக்கு பின்னர் மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளை சீரமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவில், குடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி, பொது சுகாதாரத்துறை இயக்குநர், முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் எஸ்.பி. தியாகராஜன், மருத்துவர் குகானந்தம், இந்திய மருத்துவ கவுன்சில், தனியார் நர்சிங் போர்டு, இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, படிப்படியாக ஊரடங்கு உத்தரவை விலக்குவது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் உடன் ஆலோசித்து இந்த குழு அரசுக்கு பரிந்துரை அளிக்கும் என தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.