ஊரடங்கில் தாய் வீட்டில் சிக்கிய பெண்; காதலியை 2-வது திருமணம் செய்த கணவர் கைது
1 min read
A woman trapped at her mother’s home in Corona; Husband married his beloved 2nd.
18-4-2020
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தாய் வீட்டில் ஒரு பெண் சிக்கிக் கொண்டார். அவரது கணவர் காதலியை 2-வது திருமணம் செய்து தற்போது கைதாகி உள்ளார்.
இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஊரடங்கில் சிக்கிய மனைவி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இது பொதுமக்களுக்கு பல்வேறு இழப்புகளை கொடுத்துள்ளது. ஆனால் பீகாரில் ஒரு பெண் தன் கணவரை இன்னொரு பெண்ணுக்கு பரிகொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பீகார் மாநிலம் துல்ஹின் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரத்புராவை சேர்ந்தவர் தீரஜ் குமார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்பி பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தீரஜின் மனைவி சில வேலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணால் மீண்டும் கணவனின் வீட்டிற்கு வர முடியவில்லை.
2-வது திருமணம்
இதற்கிடையில் தீரஜ் தனது மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வரச் சொல்லி போனில் கட்டாயப்படுத்தி உள்ளார்.
இருப்பினும், ஊரடங்கு உத்தரவு மற்றும் கணவரின் அழைப்பின் பேரில் கூட தீரஜின் மனைவியால் பரத்புராவிற்கு திரும்ப முடியவில்லை.
இதனால் கோபமடைந்த தீரஜ் குமார், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார்.
ரகுநாத்பூரில் தனது முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்த தீரஜின் முதல் மனைவி, துல்ஹான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் கணவர் தீரஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.