கவர்ச்சியாக நடிக்கவும் தயாரான நடிகை
1 min read
தமிழ் தெலுங்கு சினிமாவில் ஓரளவு அறியப்படும் நடிகையாக நடித்து வருபவர் நடிகை ரெஜினா கெசன்ட்ரா. ரெஜினா நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் ரெஜினா. அந்த காலகட்டங்களில் பட வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் அமையவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் பாண்டியராஜ் இயக்கத்தில் ரெஜினா நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். ராஜதந்திரம், சந்திரமௌலி, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக நடித்து வரும் ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டியில், பக்கத்து வீட்டுப் பெண், லவ்வர் கேர்ள் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் சலித்து விட்டது எனவும் கூறியுள்ளார்.
இனி வில்லியாகவும், படம் முழுக்க கவர்ச்சியான வேடங்களிலும், மோசமான பெண், திரில்லர் போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கவர்ச்சி என்ற உடனேயே கல்லா கட்ட சென்றுவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.