June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் நிவாரண நிதி அளித்தால் ஜாமீன்; ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவு

1 min read
Seithi Saral featured Image


Bail if PM pays Relief Fund; Jharkhand High court Order

19/4/2020

பிரதமர் நிவார நிதிக்கு பணம் கொடுத்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கூறியுள்ளது.

ரெயில் தண்டவாளங்களில் தடுப்பு ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் எம்.பி., உள்ளிட்ட 6 பேருக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

பாரதீய ஜனதா முன்னாள் எம்.பி.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காகவும், எந்தவொரு அவசரகால சூழ்நிலைகளையும் கையாள்வதற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்துடன் ‛பிரதமர் நிவாரண நிதி’யை மத்திய அரசு அமைத்தது. இதன்மூலம் பல்வேறு தரப்பினரும் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

அதேபோல், கொரோனா பாதித்தவர்கள் மற்றும் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் ‛ஆரோக்கிய செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியை, குறைந்த நாட்களில் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து சாதனை புரிந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ‛ரெயில் ரோகோ’ எனும் போராட்டம் தொடர்பாக கடந்த பிப்ரவரியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., சோம் மரந்தி மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன்

அவர்கள் ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை, ஐகோர்ட்டு நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தார்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், பிரதமர் நிவாரண நிதிக்கு தலா ரூ.35 ஆயிரம் நன்கொடை அளிக்க வேண்டும் மற்றும் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

மேலும், அவர்கள் நன்கொடை அளித்ததற்கும், செயலியை பதிவிறக்கம் செய்ததற்கும் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.