சண்டை மூட்டிவிட்ட நடிகர் -சொந்தத்துக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் நடிகரும் இசையமைப்பாளரும்
1 min read
தமிழ் சினிமாவில் எப்படி இவ்வளவு எளிதில் முன்னணி நாயகர்களுக்கு இணையாக வளர முடியும் என அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் தான் அந்த சீக்கிர நடிகர். இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளதால் படத்திற்கு படம் அவருடைய மார்க்கெட்டை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆனால் சீக்கிரம் நடிகர் தொலைக்காட்சியில் தடுமாறிக் கொண்டிருக்கும் போது தானாக வலிய வந்து ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர் தான் அந்த பிரபல நடிகர். அதே படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் அந்த நடிகரின் சொந்தக்காரர்.
இவர்கள் மூவரின் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்துமே பெரிய வெற்றியைப் பெற்று வந்த காலகட்டம் அது. அதுமட்டுமல்லாமல் ஒரு படத்தை எப்படி சிக்கனமாக தயாரித்து பெரிய அளவில் வியாபாரம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நுணுக்கத்தை பிரபல நடிகரிடம் கற்றுக்கொண்டார் அந்த சீக்கிர நடிகர்.
றெக்க முளைச்ச கிளி சும்மாயிருக்குமா, பறக்க ஆசைப்படும் தானே என்பதைப்போல தன்னுடைய சம்பளமும் மார்க்கெட் நிலவரம் உயர உயர ஏத்திவிட்ட ஏணியை மிதித்து விட்டாராம் அந்த சீக்கிர நடிகர். சீக்கிர நடிகர் மேடையில் அழுததெல்லாம் சும்மா கட்டுக் கதையாம். மேடை போட்டு கூவிக்கூவி அழுது எல்லாம் மக்களிடம் சிம்பதி கிரியேட் பண்ண தானாம்.
நம்ம மக்கள் தான் யார் அழுதாலும் சப்போர்ட் பண்ணுவாங்களே. அந்த வகையில் தன்னுடைய படங்களையும் தான் தயாரிக்கும் படங்களையும் நல்ல முறையில் வியாபாரம் செய்து செட்டில் ஆகிவிட்டாராம் அந்த சீக்கிர நடிகர். அதுமட்டுமல்லாமல் அவரின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது அந்த ஒல்லி இசையமைப்பாளர் தான்.
சீக்கிர நடிகரும் ஒல்லி இசையமைப்பாளரும் சேர்ந்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட்டு தான் என்கிற ரேஞ்சுக்கு பாடல்களும் படுபயங்கர ஹிட் அடித்து விடுகிறது. இதனை கண்காணித்த பிரபல நடிகர் இனி சீக்கிர நடிகரின் படங்களுக்கு இசை அமைக்கக் கூடாது என இசையமைப்பாளரை கண்டித்தாராம்.
ஆனால் அவரோ பிரபல நடிகரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த நடிகருக்கு இசையமைத்து வருகிறார். இதனால் இசையமைப்பாளருக்கும் அந்த பிரபல நடிகருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருகிறதாம். எப்போது வேண்டுமானாலும் வெளியில் தெரிவதைப் போல அடித்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
சமீபகாலமாக ஏதேனும் குடும்ப விழாக்களில் சந்தித்துக் கொண்டால் கூட இருவரும் அதிகமாக பேசிக்கொள்வது கூட இல்லையாம். இது குடும்பத்தார் இடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது சரியாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த பிரபல நடிகரின் குடும்பத்தார்கள்.
மேலும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம். உதவி செய்தது உபத்திரத்தில் முடிந்துவிட்டது என கடுப்பாகி உள்ளாராம் பிரபல நடிகர். விரைவில் இந்த பஞ்சாயத்து பெரிய அளவில் பேசப்படும் என கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.