சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
1 min read
3 trillion-crore loans for small and marginal businesses; Announcement of Nirmala Sitharaman
13-5-2020
சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ரூ.20 லட்சம் கோடி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, இந்திய பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றார். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
கடனுதவி
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று(புதன் கிழமை) வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். இந்த கடனுதவி பிணையின்றி வழங்கப்படும்.
இந்த கடனுதவி மூலம் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள் பயன் அடையும்.
இந்த கடனுதவி பெற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.