June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாலியல் தொல்லையால் இளம்பெண் தீக்குளிப்பு

1 min read
Seithi Saral featured Image
Adolescent burnout due to sexual harassment

15.5.2020

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த முனியசாமி மகள் நாகலட்சுமி (17). இவர் 10ம் வகுப்புவரை படித்து விட்டு விளாத்திகுளத்தில் உள்ள மகளிர் சுயஉதவிகுழுவில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரபாண்டி மகன் சரவணக்குமார் (24), அவரது நண்பர்கள் குகன், வேல்சாமி ஆகியோர் நாகலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் பயந்த நாகலட்சுமி கடந்த 9ம்தேதி காலை வீட்டில் தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நாகலட்சுமி வாக்குமூலம் அளிக்கும் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வைரலானது. இதையடுத்து புளியங்குளத்தை சேர்ந்த சரவணக்குமார், குகன், வேல்சாமி ஆகியோர் மீது குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்ஐ செல்லத்துரை வழக்குபதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.