June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 7,365 பேருக்கு கொரோனா சிகிச்சை

1 min read

Coronal treatment for 7,365 people in Tamil Nadu

15-5-2020

தமிழகத்தில் 7,365 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் நேற்று(வியாழக்கிழமை) புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ,674 ஆக அதிகரித்துள்ளது.

இதில் விமான நிலைய தனிமைப்படுத்தல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் அடங்குவார்கள்.

மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-

சென்னை – 4,834
செங்கல்பட்டு – 358
அரியலூர் – 335
கடலூர் – 384
தர்மபுரி – 4
திண்டுக்கல் – 31
கள்ளக்குறிச்சி – 51
காஞ்சிபுரம் – 97
கன்னியாகுமரி – 14
கரூர் – 13
கிருஷ்ணகிரி – 20
மதுரை – 47
நாகப்பட்டினம் – 3
நாமக்கல் – 16
நீலகிரி – 3
பெரம்பலூர் – 124
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 9
ராணிப்பேட்டை – 35
சேலம் – 5
சிவகங்கை – 1
தென்காசி – 20
தஞ்சாவூர் – 23
தேனி – 29
திருப்பத்தூர் – 10
திருவள்ளூர் – 410
திருவண்ணாமலை – 123
திருவாரூர் – 3
தூத்துக்குடி – 11
திருநெல்வேலி – 51
திருச்சி – 11
வேலூர் – 13
விழுப்புரம் – 251
விருதுநகர் – 12
விமானநிலைய தனிமைப்படுத்தல் – 9

மொத்தம் – 7,365

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.