June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

12 மணி நேர வேலை உத்தரவை வாபஸ் பெற்றது உ.பி. அரசு

1 min read

12-hour work order withdrawn UP Government

17-5-2020

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்த உத்தரபிரதேச அரசு அதை வாபஸ் பெற்று உள்ளது.

8 மணி நேர வேலை

தற்போது எல்லா தொழிலாளர்களும் ஒரு நாளுக்கு 8 மணி நேரமே வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்யும் நிலை ஏற்பட்டால் அதற்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதுதான் தற்போதைய சட்டம்.

ஒரு காலத்தில் தொழிலாளர்கள் நாள் முழுவதும்வேலை செய்தால்தான் ஊதியம் கிடைக்கும் நிலை உலகம் முழுவதும் இருந்து வந்தது. இதை 8 மணி நேரமாக ஆக்க தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் பல. மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த 8  மணி நேர வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

உ.பி. அரசு

இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக  அதிகரித்து உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில் அந்த மாநில அரசு தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகள், சரியான நேரத்தில் ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 4 விதிகள் தவிர்த்து அனைத்து தொழிலாளர்கள் சட்டங்களில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது.

 கடந்த மே 8-ந் தேதி அந்த மாநில தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்,, தொழிற்சாலைகளில் ஒருநாளைக்கு தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வரை பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் அதிகரித்தத்தை எதிர்த்து உத்தரபிரதேச.தொழிலாளர்கள் முன்னணி சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் சித்தார்த் வர்மா அடங்கிய் அமர்வு, மாநில அரசு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த, வழக்கை மே 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் முக்கிய தொழிலாளர் சட்டங்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்கிறது என்றும் ஆனால் மே 15-ந் தேதியிட்ட உத்தரவில், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவு மட்டும் தனி ஆணை மூலம் வாபஸ் பெறப்படுவதாக உ.பி.,அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தொழிலாளர் நல சட்டத்தை உத்தரபிரசேம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் திருத்தியுள்ளன. இதற்கு பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்). எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-நங தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.