இந்தியாவில் 90,927 பேருக்கு கொரோனா; 2,872 பேர் பலி
1 min read
Corona to 90,927 in India; 2,872 died
17-5-2020
இந்தியாவில் இதுவரை 90,927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 2,872 பேர் பலியாகி உள்ளனர்..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதாரத்தறை வெளியிட்ட வருகிறது. அதன் படி இன்று (ஞாயிற்றுக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது: –
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,752 ஆக இருந்தது. அது இன்ற 2872 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 34,109 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 30,706 பேர் பாதிக்கப்பட்டு, 7,088 பேர் குணமடைந்துள்ளனர், 1135 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பபில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 30,706
குஜராத் – 10,988
தமிழகம் – 10,585
டில்லி – 9,333
ராஜஸ்தான் – 4,960
ஆந்திரா – 2,355
தெலுங்கானா – 1,509
கர்நாடகா – 1,092
கேரளா – 587
