June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

1 min read

Curfew extended in Tamil Nadu till 31st; Restrictions relaxed in 25 districts

17-5-2020
தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் 25 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு முறை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17-ந் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் வருகி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர மற்ற 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கட்டுப்பாடுகள் தொடரும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.

தளர்வுகள்

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களில் ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை.
  • ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று வர இ-பாஸ் பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
  • அரசுப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும் செல்ல அனுமதி

தேசிய ஊரக வேலை

  • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவததற்கு அனுமதி.
  • தேசிய, அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்த பட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.