தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை; ஆபத்துதான்- உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
1 min read
There is no use in disinfecting the streets; The danger is – World Health Organization announcement
17-5-2020
தெருக்களில் கிருமி நாசினிகள் தெளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அதனால் ஆபத்துதான் ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா
கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தெருக்கள் மற்றும் வீடுகளில் கிருமி நாசினி தெளிப்பது.
பல்வேறு மாநிலங்களில் மாநிலம் விட்டு மாநிலம் வரும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
ஆனால் தற்போது தெருக்களிலும் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
உலக சுகாதார நிறுவனம்
ஆனால் இப்படி தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கொரோனா வைரஸை அழிப்பதற்காக தெருக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் சுத்தப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. இது கொரோனா வைரசையோ அல்லது வேறெந்த கிருமிகளையோ கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழந்துவிடும்.
ஆபத்து
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தும் மையமாக தெருக்களோ நடைபாதைகளோ கருதப்படவில்லை எனவே கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
தனிநபர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை. இது, உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இதனால், கொரோனா பாதித்த நபர் மற்றவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்காது.
மக்கள் மீது குளோரின் அல்லது நச்சு கலந்த வேதியியல் மருந்தை தெளிப்பது என்பது கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதேபோல் வீட்டுக்குள்ளும் தரையிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கக்கூடாது.
கிருமிநாசினி மருந்தில் நனைக்கப்பட்ட துணியை மூலம் துடைப்பதன் மூலமே, கிருமிகளை அளிக்க முடியும்.
இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.