தமிழகத்தில் ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona assures 536 people one day in tamil nadu
18-5-2020
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று(திங்கட்கிழமை) புதிதாக 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 760 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரம், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று(திங்கட்கிழமை) ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியதில் இருந்து வந்தவர்கள்
தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் நிலையில். வைரஸ் பரவியவர்களில் 490 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல் உள்பட). எஞ்சிய 46 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆகும்.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11.760 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை வருமாறு:-
அரியலூர் – 2
செங்கல்பட்டு – 43
சென்னை – 364
கள்ளக்குறிச்சி – 5
காஞ்சிபுரம் – 17
கன்னியாகுமரி – 7
கரூர் – 1
மதுரை – 3
ராணிப்பேட்டை – 2
தேனி – 9
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் – 19
திருவண்ணாமலை – 4
தூத்துக்குடி – 1
விழுப்புரம் – 4
விருதுநகர் – 3
விமானநிலைய தனிமைப்படுத்தல் – 5
மொத்தம் – 490
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
மராட்டியத்தில் இருந்து கடலூர் திரும்பியவர்கள் – 1
மராட்டியத்தில் இருந்து திண்டுக்கல் திரும்பியவர்கள் – 2
மராட்டியத்தில் இருந்து ராமநாதபுரம் திரும்பியவர்கள் – 6
மராட்டியத்தில் இருந்து சேலம் திரும்பியவர்கள் – 5
மராட்டியத்தில் இருந்து தென்காசி திரும்பியவர்கள் – 6
மராட்டியத்தில் இருந்து தூத்துக்குடி திரும்பியவர்கள் – 14
மராட்டியத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பியவர்கள் – 12
மொத்தம் – 46