June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை தண்டையார்பேட்டை, கோடம்பாக்கத்தில் கொரோனா அதிகம்

1 min read

Corona is high in Thodaiyarpet and Kodambakkam

18-5-2020
சென்னையில் தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோன தொற்று தொடந்து அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதிகமாக இருந்தால் மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடு காரணமாக சற்று குறைவாக இருந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களில் இருந்து பலர் வருவதால் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

தண்டையார் பேட்டை

சென்னையை பொறுத்தவரை தண்டையார் பேட்டை மற்றும் கோயம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

சென்னையில், அதிகபட்சமாக ராயபரத்தில் 1,185 பேரும், கோடம்பாக்கத்தில்1,041 பேரும், திரு.வி.க.,நகரில் 790 பேரும், தேனாம்பேட்டையில் 746 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 581 பேரும், அண்ணா நகரில் 554 பேரும், வளசரவாக்கத்தில் 522 பேரும், அடையாறில் 367 பேரும், அம்பத்தூரில் 317 பேரும், திருவொற்றியூரில் 147 பேரும், மாதவரத்தில் 121 பேரும், சோழிங்கநல்லூரில் 95 பேரும், பெருங்குடியில் 86 பேரும், மணலியில் 86 பேரும்,ஆலந்தூரில் 80 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 32 பேர் உள்ளனர். ஆக மொத்தம் சென்னையில் 6,750 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.