June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாtpல் ஒரே நாளில் 5611 பேருக்கு கொரோன; 140 பேர் மரணம்

1 min read

5611 in one day in India tp; 140 people died

20-5-2020
இந்தியா முழுவதும் ஒரே நாளில் மட்டும் 5611 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 140 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

140 பேர் மரணம்

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 106750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42298 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3124 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மராட்யத்தில் 37136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1325 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12140 பேருக்கும், தமிழகத்தில் 12448 பேருக்கும், டெல்லியில் 10554 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.