June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் உதவி; தமிழக அரசு அறிவிப்பு

1 min read


Rs. 2000 assistance for unregistered weavers

20-5-2020
பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதாராண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விதியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

நெசவாளர்கள்

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு செய்யும் நெசவு தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரண தொகையான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

நிதிஉதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.