இந்தியாவில் கொரோனாவுக்கு 11,2359 பேர் பாதிப்பு
1 min read
11,2359 people affected by coronation in India
21-5-2020
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 112359 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்திய மக்களையும் பீதியடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தனிமைப் படுத்தி தீவிர சிகிச்சை அளித்தும் வருகிறார்கள்.
ஆனாலும் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறை தினமும் காலையில் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (வியாழ்ககிழமை) கொரோனா தகவலை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் கொரோவுக்கு கடந்த 24 மணி நேரத்தில்132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3435 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 45,300 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். நேற்று(புதன்கிழமை) மட்டும் ஒரே நாளில் 3002 பேர் குணமடைந்துள்ளனர்.
மராட்டியம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டி மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 39,297 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1390 பேர் இறந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 12,537 பேருக்கும், தமிழகத்தில் 13,191 பேருக்கும், டெல்லியில் 11,088 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.