June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிப்பு-பதற்றம்

1 min read

Chinese military concentrations on the Indian border

24-5-2020

இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

சீனா

அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு என்றுமே பிரச்சினையாகத்தான் உள்ளது. பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை பிடித்து வைத்திருப்பததோடு பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
சீனாவும் இந்தியாவை எதிரியாகவே கருதுகிறது. இந்தியாவுடன் நட்பு நாடாக இருந்து நேபாளம் கூட தற்போது இந்தியாவிடம் வாலாடத் தொடங்கி உள்ளது.
சீனாவை பொறுத்தவரை இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்களை நடத்துவது, எல்லை பகுதிக்குள் வீரர்கள் நுழைவது, ட்ரோன்கள் மூலம் நமது பகுதிகளை கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் சீனா 100 க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை செய்துள்ளது.

ராணுவம் குவிப்பு

இந்த நிலையில் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு குவித்து வருகிறது.

பாங்காங் டிசோ பகுதியில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டசீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு கூடாரங்களை அமைத்து வருகிறது. இது வரை 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அந்தப் பகுதியில் அதி நவீன ஆயுதங்களை குவிப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் காலத்தில் அமைக்கப்படும் பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளையும் அவர்கள் அமைத்து வருகிறார்கள். 100 க்கும் மேற்பட்ட அளவில் பதுங்கு குழிகள் அமைத்து இருப்பதாக கூறப்படுகறிது..
இதுபோல் இந்தியா – சீன எல்லைகளில்
குறிப்பாக 4 இடங்களை அந்நாட்டு அரசு குறி வைக்கிறது. இதற்கு முன்பு அந்த பகுதிகளில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. லடாக் எல்லையில் சீனா குறி வைத்துள்ளதால் அந்த பகுதியில் ராணுவ தளபதி நரவானே அங்கு சோதனை நடத்தினார். லடாக்கின் லே எல்லையில் சோதனை நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. லடாக் பகுதியில்இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இ,தனால் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

சிக்கிம்

ஏற்கனவே சிக்கிம் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே கடந்த வாரம் பிரச்னையால் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் நகு லா பகுதியில் சண்டை வந்தது. கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் சீன அரசு போர் விமானங்களை அனுப்பியதும் அத்துமீறியதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.