சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மரணம்
1 min read
Singampatti Jameen Murugadoss Died
24-5-2020
சிங்கம்பட்டி, கடைசி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மரணம் அடைந்தார்.
சிங்கம்பட்டி ஜமீன்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியின் கடைசி ஜமீன்தாரராக இருந்தவர் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி. இவர் உடல் நலகுறைவால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89,. ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.
மரணம் அடைந்த ஜமீனுக்கு இறுதிசடங்குகள் நாளை சிங்கம்பட்டியில் நடக்கிறது.
ஜமீன் வரலாறு
இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய பகுதிகளை அடங்கியது விஜயநகரப் பேரரசு. இந்த பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகரத்தின்கீழ் மதுரை ஆட்சியாளர்களாக இருந்து வந்த விசுவநாத நாயக்கர், மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், இறையாண்மை பெற்ற ஆட்சித் தலைவர்களாக ஆயினர். பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை 72 பாளையங்களாக கி.பி 1433-ல் பிரித்தார்கள். அப்போதுபிறந்ததுதான் சிங்கம்பட்டி பாளையம்.
விஸ்வநாத நாயகர் மதுரையைச் சுற்றி புதியதாக கோட்டை அமைத்தார். அதில் அமைக்கப்பட்ட 72 கொத்தளங்களில் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையில் விடப்பட்டன. விஸ்வநாத நாயக்கர் சிங்கம்பட்டி பாளையக்காரருக்கு ‘தென்னாட்டுப் புலி’ என்ற பட்டத்தை அளித்தார்.
சிங்கம்பட்டி பாளையத்தின் அடையாளமாக இன்றும் உள்ளது சிங்கம்பட்டி அரண்மனை.. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழ்நாட்டில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியும் வட இந்தியாவில் ஜோத்பூர் மகா ராஜாவும் மட்டுமே. சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபி ஜமீ ன் 31-வது தலைமுறை ஆகும். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அவருடைய தந்மை திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா இறந்துவிட்டார். இதனால் சிறுவனாக இருந்த முருகதாஸ் தீர்த்தபதியை அரியணையில் ஏற்றிவிட்டார்கள்.இவர் தான் சிங்கம்பட்டி ஜமீனின் கடைசி ராஜா’.