June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் இருந்து சேலம் சென்ற மணப்பெண்ணுக்கு கொரோனா; தாலி கட்டியவுடன் தனிமை

1 min read


Went to Salem from Chennai Corona to the Bride; Dali Loneliness when built

24-5-2020
சென்னையில் இருந்து சேலம் சென்ற மணப்பெண்ணுக்கு கொரோன இருப்பது கண்டறியப்பட்டது. இன்று காலை திருமணம் முடிந்ததும் புதுப்பெண் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்படார்.

திருமணம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் கெங்கவல்லியைச் சேர்ந்த 28 வயதான இவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை 24-5-2020 (அதாவது இன்று) நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவு உறவினர்களுடன் திருமணத்தை நடத்துவது என்றும் முடிவு செய்திருந்தார்கள்.

கொரோனா

திருமணத்திற்காக சென்னையில் இருந்து கடந்த 21-ந்தேதி மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஒரு காரில் சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டனர். மொத்தம் 12 பேர் சென்றனர். வழியில் தலைவாசல் நத்தக்கரை சோதனைச் சாவடி மையத்தில் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோான இருப்பது திட்டவட்டமானது. மேலும் அவருடன் சென்னையில் இருந்து சென்ற வர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தடுப்பு

மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

தனிமை

மிகுந்த பாதுகாப்புடன் இன்று காலை திருமணம் நடந்தது. அதாவது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருமணம் முடிந்ததும் மணமகள் அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார். அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இன்று நடக்க வேண்டிய சாந்தி மூகூர்த்தம் நடைபெற வில்லை. இதனால் மணமகன் உள்பட உறவினர்கள் கவலை அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.