மகன் இறந்த துக்கத்தில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை
1 min read
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடி கால–னியை சேர்ந்தவர் ஜெயக–வுரி (59). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசி–ரியை. இவரது கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களது மகள்கள் விஜயலெட்சுமி (28), விஜயவாணி(26), மகன் விஜயகுமார்(25). டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 9 மாதத்திற்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு(31ம் தேதி) 7 மணியளவில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமானதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மகன் இறந்த துக்கத்தில் இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஜெயகவுரி சொல்லவில்லையாம். ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினரும், ெஜயகவுரி வீட்டார் யாரும் சரிவர பேசாததால் அவரது வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிக்கவில்லை.

இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் வேதனை–யில் இருந்த ஜெயகவுரி சில மணி நேரத்திலே, அவரது மகள்களுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இரவு 7.30 மணிக்கு 3 பேரும் சேர்ந்து விஜயகுமாரின் உடலை வீட்டில் உள்ள அறை–க்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்கு இரண்டு சிலிண்டர்–களை எடுத்து வந்து ஜெயகவுரி உள்பட 3 பேரும் விஜயகுமாரின் சடலத்தை கட்டிப்பிடித்தவாறு சிலிண்டர்களை திறந்து விட்டு தீயை பற்ற வைத்துள்ளனர். தீ பற்றியவுடன் இரு சிலிண்டர்களும் வெடித்து சிதறியது. இதில் விஜயகுமாரின் உடலுடன், 3 பேரும் கருகி பலியாயினர். 4 பேரின் உடல் பாகங்களும் சிதறியது.
சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை, ஜன்னல்கள், முன்பக்க கதவு உடைந்து பல அடி தூரத்தில் விழுந்தது. மேற்கூரை ஓடுகள் பல மீட்டர் தூரம் சிதறி கிடந்தன. மேலும் பக்கத்து வீட்டின் சுற்றுசுவர், ஓய்வு பெற்ற ஓஎப்டி ஊழியரின் வீட்டு ஜன்னல் உடைந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜெயகவுரியின் வீட்டை ஒட்டி வீடுகள் இல்லை. மேலும் அவர்கள் அக்கம்பக்கத்தில் யாருடனும் சரிவர பேசுவதில்லையாம். இதனால் அங்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியவில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கி கருகி கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை டிஎஸ்பி சுரேஷ்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் 4 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் கட்டிப்பிடித்ததுபோன்று இருந்தது. இதனால் விஜயகுமாரின் சடலத்தை அவர்கள் கட்டிப்பிடித்தப்படி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசார் கூறியதாவது:
ஜெயகவுரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 5 வருடங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். மகன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு மகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
ஆசிரியராகவும், மற்றொரு மகள் தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன் சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெயகவுரி உள்பட 3 பேருக்கும் விஜயகுமார் மீது அதிகம் பாசம் வைத்திருந்தனர்.
சென்னையில் விஜயகுமார் விபத்தில் சிக்கியபோது படுகாயமடைந்து கோமாவில் இருந்தார். கடன் வாங்கி கோமாவில் இருந்த மகனுக்கு சென்னையிலே ஜெயகவுரி சிகிச்சை அளித்துவந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் இல்லாததால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். ஒரு ஆண்டுக்கு முன் அவர்கள் திருச்சிக்கு வந்தனர். இங்கு வைத்து 2 மகளின் வருமானத்தில் மகனுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வேலைக்கு இரு மகள்களும் வீட்டிலிருந்து வந்தனர். வருவாய் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் மகனுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் உடல் நலம் மோசமான மகன் நேற்று இறந்தார். பட்டினி ஒருபக்கம், மகன் மீது பாசம் ஒரு பக்கம் என போராடிய ஜெயகவுரி நேற்று மகன் இறந்த துக்கத்தில் அடுத்த சில மணி நேரத்திலே 2 மகள்களுடன் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் ெதரிவித்தனர்.
ஜெயகவுரிக்கு திருச்சியில் உறவினர்கள் யாரும் இங்கு இல்லை. அவரது அண்ணன் ஜெயசங்கர் ஈரோட்டில் உள்ளார். அவருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்தவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 4 பேரின் உடல்களையும் போலீசார் அவரிடம் இன்று ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.