அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து யானை கொலை- ஒருவர் கைது
1 min read
Elephant killed in pineapple explosion-One person arrest
5-5-2020
கேரளாவில் அன்னாசிப் பழத்தில் வெடி மருந்து வைத்து கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யானை கொலை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவை பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று ஒரு கிராமத்துக்குள் உணவு தேடி சென்றுள்ளது. அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அதற்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது. துள்ளனர்.
அந்தப் பழகத்தை தின்ற யானை வெடிவெடித்து அதன் நாக்கு, வாய்ப் பகுதிகள் சிதறின. வேதனை தாங்க முடியாமல், தண்ணீருக்குள் அந்த யானை தத்தளித்தது.
இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள், கும்கி யானையின் உதவியோடு, அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த யானை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. வலை தளத்திலும் வைரலாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
கைது
மத்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள அரசிடம் தகவல் கேட்டுள்ளது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்த செயலைசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் 3 பேர் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.