July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியா-ஜப்பான் இணைந்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம்

1 min read


India-Japan plan to send space shuttle to the moon

13-6-2020

இந்தியாவும், ஜப்பானும் இணைந்த நிலவின் துருவப் பகுதியை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்புக்கிறது.

விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ, விக்ரம் லேண்டரை அனுப்பியது. அது நிலவின் அருகே இறங்கி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அதனுடன் அனுப்பப்பட்ட விண்கலம் நிலவை சுற்றிவந்து புகைப்படத்தை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் நிலவின் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இந்த தகவலை ஜப்பான் நிறுவனமான ஜாக்சா வெளியிட்டுள்ளது

எச்3 ராக்கெட்

நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்ய லேலண்டர், ஆய்வூர்தி ஆகிய இரண்டும் இத்திட்டத்தில் இடம் பெறுகிறது. இதன்படி லேலண்டரையும், ஆய்வூர்தியையும் ஜப்பான் வடிவமைக்கிறது. தரையிறக்கும் அமைப்பை இஸ்ரோ தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள மிட்ஸுபிஷி தயாரிப்பில் உருவாகும் எச் 3 ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிலவின் துருவப் பகுதியில் தண்ணீர் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் நீரானது என்ன வடிவில் எந்த அளவு உள்ளது என்பதையும், எதிர்காலத்தில் அதை விண்வெளித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதையும் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஜாக்சா அறிவித்துள்ளது.

மேலும் நிலவில் தரையிறங்கும் ஆய்வூர்தியானது, தண்ணீர் இருக்க கூடிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள தனிமங்களை ஆய்வு செய்து ஹைட்ரஜனை கண்டறிந்தால், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தண்ணீர் இருப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.