பெயரை மாற்றி கதாநாயகி ஆகிறார் நீலிமா
1 min read
Neelima is the heroine who changed her name
13-5-2020
தன் பெயரை மாற்றி ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்டெலிவிஷன் நடிகை நீலிமா
நீலிமா
டெலிவிஷன் தொடர்களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்குபவர் நீலிமா ராணி. இவர் ராதிகாவில் ராடன் நிறுவத்தின் பல தொடர்களில் நடித்து உள்ளார்.
நீலிமா ராணி ‘தேவர் மகன்’ படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் நடித்தார். அதன்பின் ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மன்னர் வகையறா’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல மொழிகளில் 80க்கும் அதிகமான டெலிவிஷன் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு சினிமாவில் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை. குணசித்ர வேடங்களில்தான் நடித்தார். இதனால்தான் அவர் டெலிவிஷனுக்கு சென்றார்.
திருமணம்
இவர் இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் இணைந்து நிறம்மாறாத பூக்கள், என்றென்றும் புன்னகை ஆகிய டெலிவிஷன் தொடர்களையும் தயாரித்துள்ளார்.
டெலிவிஷனின் ஆதிக்கம் செலுத்தினாலும் அவருக்கு சினிமா கதாநாயகி ஆசை இன்னும் விடவில்லை.
பெயரை மாற்றி
இந்த நிலையில் இவர், ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால் அந்தப்படத்தில் அவர் நீலிமா ராணி என்ற பெயரில் நடிக்கவில்லை.. தன்பெயரை நீலிமா இசை என்று மாற்றி புதிய பெயரில்தான் அந்தபடத்தில் நடிக்கிறார்.
ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் அவர் தனது பெயரை மாற்றியிருக்கிறார்.
ஆனால் அவர் நடிக்க உள்ள படமானது கிராமத்தில் நிலவும் மூடநம்பிக்கையை மையமாக கொண்டதாம். அதாவது கிராமத்தில் நிலவும் மூடநம்பிக்கையை மாற்றும் படித்த பெண்ணை பற்றிய கதையாம்.