தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக் 38 பேர் சாவு
1 min read
38 people died for Corona one day in Tamil Nadu 14-6-2020
தமிழகத்தல் இன்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
1,974 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் தகவலை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 79 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதன் மூலமாக இன்று ஒரே நாளில் 18,782 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இது வரை தமிழகத்தில் 7,10,599 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
38 பேர் பலி
இன்று கொரோனாவுக்கு 38 பேர் இறந்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கை உயர்ந்தது இதுதான் முதல்முறை.
இன்று இறந்தவர்களில் சென்னையில் 31 பேரும், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் அடங்குவர். இதில் 22 பேர் அரசு ஆஸ்பத்தியிலும், 16 பேர் தனியார் ஆஸ்பத்திரியலும் இறந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19,676 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,270 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 37,252 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 5,139 பேரும் உள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மாயமானவர்கள் 277 பேர்
பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பின் பரிசோதனை முடிவு வந்தவுடன் அதில் யாருக்காவது பாசிட்டிவ் இருந்தால் அதாவது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள். மேலும் அவர்கள் வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ந் தேதியில் இருந்து ஜூன் 11-ந்தேதி வரை பாசிட்டிவ் ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. அவர்களிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டால் அவர்கள்போனை எடுப்பது இல்லை. மேலும் பலர் போலியான முகவரியை கொடுத்துள்ளனர்.