அமெரிக்காவில் இன்னொரு கறுப்பினத்தவர் கொலை; மீண்டும் போராட்டம்
1 min read
Another black man in America Murder; The struggle again
14-6-2020
அமெரிக்காவில் இன்னொரு கறுப்பு
இனத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
செய்யப்பட்ட சம்பவம் மீண்டும்
போராட்டத்தை உருவாக்கி உள்ளது.
கறுப்பு இனத்தவர்
அமெரிக்காவில் ஏற்கனவே கறுப்பு இனத்தைச்
சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது மின்னபொலிஸ் நகரில், ஜார்ஜ்
பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், போலீசார்
அத்துமீறலில் உயிரிழந்ததில், அமெரிக்காவின்
அனைத்து மாகாணங்களிலும் ஆரம்பித்த
போராட்டம், உலகத்தின் பல நாடுகளிலும்
போராட்டம் நடந்தது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதை
தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் இப்போது இன்னொரு கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.
சுட்டுக் கொலை
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள
உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ்(வயது 27) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு காரில் தூங்கி கொண்டிருந்தார்.
இதனால், ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் வர முடியாமல் தவித்தனர். எனவே இதபற்றி ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து, புரூக்ஸ் மது குடித்துள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர். அதற்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரிடம் ரகளை செய்த அவர் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு ஓட முயன்றார்.
அவரை போலீசார் பின் தொடர்ந்த போது, அவர்களை புரூக்ஸ் சுட முயன்றார். இதனால்,போலீசார் துப்பாக்கியால் புரூக்சை சுட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அதன்பின் புரூக்சை போலீசார் பிடித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இந்த மோதல் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டாநகர போலீஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதனை கண்டித்து, அட்லாண்டா நகரில் போராட்டம் உருவானது. பல இடங்களில்சாலைகளை மறித்து போராட்டம் நடந்துவருகிறது.