June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பிளாஸ்மா சிகிச்சையால் குணமான கொரோனா நோயாளி

1 min read
Corona patient curell By plasma treatment in Kerala

14-6-2020

கேரளாவில் ஆபத்தான நிலையில் இருந்த கொரோனா நோயாளி ‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்‌ஷன் தெரபி’ என்ற சிகிச்சையால் குணம் அடைந்துள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இதுவரை அதிகாரப் பூர்வமான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா மற்று சி காய்ச்சலுக்குரிய மருந்தைத்தான் கொடுக்கிறார்கள். மேலும் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவு, மத்திரைகளையும் கொடுக்கிறார்கள்.
ஒருவருக்கு கொரோனா வீரியம் அதகமாகும் போதுதான் வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன்
அளிக்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை

கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்‌ஷன் தெரபி’யும் ஒன்று. அப்படி என்றால் என்ன?

கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவரின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து அதை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதே ‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்‌ஷன் தெரபி’ சிகிச்சை ஆகும்.

கடந்த காலங்களில் ரேபீஸ் (வெறிநாய்க்கடி), ஹெபாடடிஸ் பி, போலியோ, தட்டடம்மை, இன்புளுவென்சா, எபோலா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் இருந்தது. இந்த நோய்களுக்கு இந்த முறையில் குணம் கிடைத்து இருக்கிறது.
இப்போது கொரோனாவுக்கும் அதே முறையில் குணப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் குணம் அடைந்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி மிக அதிகமாக ஏற்பட்டு விடும் என்பதால்தான் அவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தும் முறைதான் இது.

கேரளாவில்…

இந்த முறையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்து, 51 வயதான ஆண்
ஒருவர், திரிச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார்.
அவர் ஆபத்தான கட்டத்தில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். அவரது நரம்பில் கடந்த வியாழக்கிழமையை பிளாஸ்மாவை செலுத்த தொடங்கினர். வெள்ளிக்கிழமை காலையில் தேவையான அளவு செலுத்தி முடிக்கப்பட்டது. அதன்பின் அவர் பூரண குணம் அடைந்துவிட்டார்.கேரளாவில் இந்த சிகிச்சை அளித்து உயிர் காக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த சிகிச்சையானது, உடலுக்கு வெளியே நிகழ்த்தப்படும் ‘அபரெசிஸ்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

டேவிஸ் அந்தோணி

இந்த சிகிச்சையை அந்த ஆஸ்பத்திரியின் மருத்துவம், மாற்று மருந்து, மயக்க மருந்து துறைகளின் டாக்டர்கள் செய்து முடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தாமாக முன்வந்து பிளாஸ்மா அளித்தவர் பெயர் டேவிஸ் அந்தோணி.

இதுபற்றி அந்த ஆஸ்பத்திரி ரத்த வங்கி அதிகாரி கூறும்போது, “தானாக முன்வந்து பிளாஸ்மா அளித்த டேவிஸ் அந்தோணியை பாராட்டுகிறேன். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இனி இன்னும் பலர் தாமாக முன் வந்து பிளாஸ்மா அளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

இந்த ஆஸ்பத்திரியில் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுக்கும் ‘அபரெசிஸ்’ கருவி கடந்த மே மாதம்தான் வைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா தானம் வழங்குகிறவர்கள், 48 மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை பொறுத்தமட்டில் பிற மாநிலங்களை விட இங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அற்புதமான சிகிச்சை, உலக தரத்தில் அளிக்கப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் கூறி உள்ளனர்.

கொரோனா (கோவிட்-19) நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து பிளாஸ்மாவுக்கான ரத்தம் எடுக்கப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.