இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா- 380 பேர் சாவு
1 min read
10,667 person affected by corona and 380 death one day in India
16-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
10,667 பேருக்கு கொரோன
இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 013 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
380 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் கொரோனாவுக்கு 380 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 215 பேர் குணமடைந்தனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக…
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கையும் மாநில மாநில வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,10,744 ( 4,128)
தமிழ்நாடு- 46,504 (479)
டெல்லி -42,829 (1,400)
குஜராத்-24,055 (1,505)
உத்தரபிரதேசம் -13,615 (399)
ராஜஸ்தான்-12,981 (301)
மேற்கு வங்காளம்- 11,494 (485)
மத்திய பிரதேசம்-10,935 (465)
அரியானா-7,722 (100)
கர்நாடகம்-7,213 (89)
பீகார்-6,650 (40)
ஆந்திரா -6,456 (88)
காஷ்மீர்-5,220 (62)
தெலுங்கானா-5,193 (187)
அசாம்-4,158 (8)
ஒடிசா-4,055 (11)
பஞ்சாப் 3,267 (71)
கேரளா-2,543 (20)
உத்தரகாண்ட்-1,845 (24)
ஜார்க்கண்ட்-1,763 (8)
சத்தீஸ்கர்-1,756 (8)
திரிபுரா-1,086 (1)
கோவா-592(0)
இமாச்சல பிரதேசம்-556 (8)
லடாக்-555(1)
மணிப்பூர்-490(0)
சண்டிகர்-354(6)
புதுச்சேரி-215(5)
நாகலாந்து-177(0)
மிஜோரம்-117(0)