June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுரை பரவை மார்க்கெட்டில் 11 பேருக்க கொரோனா- பரவலை தடுக்க சில ஆலோசனை

1 min read
11 person affected by Corona in Madurai paravai market - Some suggestions to prevent spread

16-6-2020

மதுரை பரவை மார்க்கெட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

சென்னை மற்றும் சென்னையோடு ஐக்கியமான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களால் கொரோனா பரவியதாக பேசப்பட்டது. ஆனாலும் அதை ஓரளவு கட்டுப்படுத்தி விட்ட நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்னர்தான் சென்னை பகுதியில் அதிகமாக கொரோனா பரவியது.

மதுரையில்…

இந்த நிலையில் மதுரை அருகே பரவை காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பரவியது அந்த மாவட்டத்தை அச்சம் அடைய வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியுள்ளது.
மதுரை பரவை மார்க்கெட்டில் ஒரே சமயத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரவைமார்க்கெட்டில் உள்ள ஒரு மொத்தக்கடை உரிமையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு முதலில் கொரோனா அறிகுறி தென்பட்டது. அவர்களை பரிசோதித்ததில் உரிமையாளர் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் மதுரை விளாங்குடி சி.ஏ.எஸ்.காலனியை சேர்ந்தவர்கள். இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் உரிமையாளருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள், பக்கத்து கடைக்காரர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நரிமேட்டை சேர்ந்த 35 வயது ஆண், விளாங்குடியை சேர்ந்த 45 வயது ஆண் உட்பட 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் ஒருவர் கடையில் மானேஜராக இருப்பவர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில
கலெக்டர் டி.ஜி.வினய் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பரவை மார்க்கெட் மூடல்

மறு உத்தரவு வரும் வரை பரவை மார்க்கெட்டை திறக்கக்கூடாது. உத்தரவை மீறும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பேரிடர் மேலாண்மை சட்டம் பாயும். தினமும் இரு முறை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.

அனைத்து உரிமையாளர், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கபசுரகுடிநீர், ஜிங்க், விட்டமின் சி மாத்திரைகள் வழங்க பரவை மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மார்க்கெட் மூடப்பட்டு சீலிடப்படுவதை கண்காணித்து அறிக்கை அளிக்க மதுரை ஆர்.டி.ஓ., வடக்கு தாசில்தாருக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

பரவை மார்க்கெட்டைப்போல் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்த 37 வயது லோடுமேன், பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை செய்த 17 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக மார்க்கெட் பகுதியில் இருந்துதான் கொரோனா பரவல் எளிதாகும். காரணம் மார்க்கெட்டுக்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்களிகள் மற்றும் பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்படும்.

கோரிக்கை

எனவே அரசு இந்த மார்க்கெட் விசயத்தில் மிகுந்த கவனம் தேவை. நகர் முழுவதற்கும் ஒரே இடத்தில் மார்க்கெட் அமைப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் அதை தடுக்க வேண்டும். காய் கறி, மளிகை, பூ மார்க்கெட்டுகள் என எல்லாமே தனித்தனி இடங்களில் அமைக்க வேண்டும்.
நகரங்களில் பகுதிக்கு ஒரு மொத்த மார்க்கெட் என உருவாக்க வேண்டும். அந்தந்த பகுதி சில்லறை வியாபாரிகள் அந்தந்த பகுதியில் உள்ள மொத்த மார்க்கெட்டில்தான் வாங்க வேண்டும். ஒவ்வொரு மார்க்கெட்டிலும் விலை விவரங்கள் ஒரே போல் இருக்கவேண்டும். இதை அரசு கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தடுக்கலாம்.
கொரோனா அதிகம் பாதித்த பகுதியில் கடைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்து தள்ளுவண்டி மூலமோ அல்லது திறந்த வேன் மூலமோ விற்பனை செய்வதை செயல்படுத்த வேண்டும். அப்படி விற்பனைசெய்யும் வியாபாரிகள் அடிக்கடி கையை கழுவ தண்ணீர் கண்டிப்பாக கொண்டு செல்ல

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.