June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு பலி

1 min read

49 person death for corono today in tamil nadu

16-6-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

49 பேர் சாவு

தமிழக்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தினமும் மாலையில் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. . இதனால் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைவிட இன்று கொரோனா தொற்று சற்று குறைந்து உள்ளது.

ஆனால் , இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 49 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. இன்று இறந்தவர்களில் 14 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்கள்.

இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7,48,244 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் வாரியாக…

தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 919 பேர். செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் 88 பேர்.

மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் இன்று 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டடுள்ளது. இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக வருமாறு:-

  1. சென்னை – 919
  2. அரியலூர் – 4
  3. செங்கல்பட்டு – 88
  4. கோவை -2
  5. கடலூர் – 11
  6. தருமபுரி – 2
  7. திண்டுக்கல் – 14
  8. கள்ளக்குறிச்சி – 7
  9. காஞ்சிபுரம் – 47
  10. கன்னியாகுமரி – 6
  11. கரூர் – 1 (வெளியில் இருந்து வந்த நபர்)
  12. மதுரை – 20
  13. நாகை – 43
  14. நாமக்கல் -3
  15. பெரம்பலூர் – 2
  16. ராமநாதபுரம் – 18
  17. ராணிப்பேட்டை – 76
  18. சேலம் – 5
  19. சிவகங்கை – 2
  20. தென்காசி – 13
  21. தஞ்சாவூர்- 4
  22. தேனி – 4
  23. திருவள்ளூர் – 52
  24. திருவண்ணாமலை – 65
  25. திருவாரூர் – 10
  26. தூத்துக்குடி – 1
  27. திருநெல்வேலி – 18
  28. திருப்பூர் – 1
  29. திருச்சி – 14
  30. வேலூர் – 16
  31. விழுப்புரம் – 18
  32. விருதுநகர் – 8

ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.