June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சோதனைசாவடியில் பேய் நடமாட்டமா? மயங்கி விழுந்த பெண் போலீஸ்

1 min read

16.6.2020

Don’t haunt the checkpoint? Woman Police Feeling Drowsy With Nose Blood

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் போலீசார் தொடர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார துறையினருடன் இணைந்து அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்துநிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார், சோதனைசாவடியில் பதிவானதாக கூறி ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டிருந்தனர். அதில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து சோதனைசாவடி பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி கிளம்பியது.

சோதனைசாவடி பகுதியில் மின் மயானமும், அதன் அருகிலேயே இறந்தவர்களை புதைக்கும் மயானமும் உள்ளது. இதனால் இந்த சோதனைசாவடியில் பணியாற்ற உள்ளூர் போலீசார் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் புறநகர் பகுதியை சேர்ந்த போலீசார் இங்கு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பவானியில் இருந்து கருங்கல்பாளையம் சோதனைசாவடி பகுதியில் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் காவலர் தனபாக்கியம், இன்று காலை பணியில் இருந்தபோது திடீரென மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில்

மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த காவலர்கள் உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கருங்கல்பாளையம் சோதனைசாவடி பகுதியில் இன்று காலை பாத்திர வியாபாரத்திற்கு வந்த வியாபாரி ஒருவர், திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேய் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் சோதனைசாவடி பகுதியில் பெண் காவலர் மற்றும் பாத்திர வியாபாரி அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் கருங்கல்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.