June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா

1 min read

2,115 Person affected for corona in Tamil nadu one day

19-6-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 1,322 பேராகும்.

2.115 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பற்றிய விவரங்களை தினமும் மாலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( வெள்ளிக்கிழமை) மட்டும் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களில் சென்னையில் மட்டும் 1,322 பேர் ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை 38,327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, வேலூரில் 103 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 86 பேருக்கும், மதுரையில் 58 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

41 பேர் சாவு

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 ஆகும். இவர்களில் 30,271 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,509 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 41 பேர் இறந்து உள்ளனர். இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக…

மாவட்ட வாரியாக இன்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை வருமாறு. இதில் வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்துவந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை 1,322
செங்கல்பட்டு 95
காஞ்சிபுரம் 39
திருவள்ளூர் 86(1)
நெல்லை 27( 9)
தென்காசி 14(3)
தூத்துக்குடி 28(2)
கன்னியாகுமரி 7
மதுரை 58
விருதுநகர் 15
ராமநாதபுரம் 22(1)
சிவகங்கை 18
தேனி 15
தஞ்சாவூர் 13
அரியலூர் 7(2)
கோவை 29
கடலூர் 5
தர்மபுரி 3(1)
திண்டுக்கல் 22
ஈரோடு 1
கள்ளக்குறிச்சி 7
கரூர் 3
கிருஷ்ணகிரி 13(1)
நாகப்பட்டினம் 9(1)
நீலகிரி 6
புதுக்கோட்டை 8
ராணிப்பேட்டை 4
சேலம் 18(2)
திருப்பத்தூர் 8
திருவண்ணாமலை 37
திருவாரூர் 10
திருப்பூர் 2
திருச்சி 13
வேலூர் 103
விழுப்புரம் 31

மேலும் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர் ஒருவருக்கும், உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர் 15 பேருக்கும் ரெயில் மூலம் வந்தவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.