June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையிலிருந்து தென்காசி வந்த 24 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 24 people from Chennai to Tenkasi

20-6-2020

சென்னையில் இருந்து தென்காசி வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இருந்த வந்தவர்கள்

சென்னையில் கொரோனா பரவலை கடுப்படுத்த வருகிற 30-ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்க சென்றனர்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து தென்காசி வந்த 24 பேருக்கு கொரோனாதொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுரண்டை யைச் சேர்ந்த 17 வயது ஆண், சங்கரன்கோவில் சேர்ந்த 29 வயதுள்ள பெண், நடுவக்குறிச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண், 33 வயதுடைய பெண், தென்காசியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 23 வயது ஆண், வடகரையைச் சேர்ந்த 24 வயது பெண் , மேலகரத்தைச் சேர்ந்த 20 வயது பெண், தேவி பட்டணத்தைச் சேர்ந்த 60 வயது பெண், 50 வயது பெண், 59 வயது ஆண், 34 வயது ஆண், ஆவுடையா புரத்தைச் சேர்ந்த 34 வயது ஆண், சென்னை தி நகரைச் சேர்ந்த 42 வயது ஆண்,

பொட்டல்புதூர் சேர்ந்த 32 வயது ஆண், 41 வயது ஆண், 3 வயது சிறுவன், 24 வயது பெண், செல்வ விநாயக புரத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன், செட்டி யூரைச்சேர்ந்த 69 வயது ஆண், பங்களா சுரண்டையைச் சேர்ந்த 23 வயது ஆண், 2 வயது சிறுவன், கீழ சுரண்டையைச் சேர்ந்த 47 வயது ஆண்,கீலநீலிதநல்லூரைச் சேர்ந்த 33 வயது பெண், மலையான் குளத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஆகிய 24 பேர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை

திருநெல்வேலி மாவட்டத்திலும் வெளி மாநிலங்கள், வெளி ஊர்களிலிருந்து வருவோர்களால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் உடனே மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 598 ஆக உயர்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இன்று மட்டும்10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அ வர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 423 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது 164 பேர் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 5 போ் இறந்துள்ளனா். இதில், 3 போ் மட்டுமே தூத்துக்குடி மாவட்ட கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா். ஒருவா் விருதுநகா் மாவட்டத்தின் கணக்கிலும், ஒருவா் திருநெல்வேலி மாவட்ட கணக்கிலும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும்

தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்தள்ளது.

இன்று மட்டும்1,630 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 31,361 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் கொரோனாவுக்கு இறந்ததாக கூறப்படுகிறது. இதில் 14 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகம் முழுவதும் இதுவரை 704 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.