June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

படுத்துக்கொண்டே வாதாடிய வக்கீல்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டிப்பு

1 min read


Advocate argued, lying down ; Supreme Court Judge Strictly

21-6-2020

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த வழக்கு விசாரணையின் போது படுக்கை அறையில் படுத்துக் கொண்டே வாதாடி வக்கீலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டித்தார்.

வீடியோ காரன்பரஸ்

தற்போது கொரோனா பரவல் காரணமாக கோாட்டுகள் செயல்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் முக்கிய வழக்குள் வீடியோ காரன்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வக்கீல்கள் தங்கள் வாதத்தை வீட்டியில் இருந்தபடியே எடுத்துக் கூறலாம்.

சுப்ரீம் கோர்ட்டி் ஒருவழக்கு விசாரணை நீதிபதி எஸ்.ரவீந்திர பட் முன்னிலையில் நடந்தது. அப்போது இந்த வழக்கில் ஒரு வக்கீல் வீட்டில் இருந்தபடி வாதாடினார்.அவர் ‘டி சர்ட்’ அணிந்து, படுக்கையில் சாய்ந்தபடி, வாதங்களை எடுத்து வைத்து பேசினார்.

கண்டனம்

இதற்கு நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஒரு வக்கீல், கோர்ட்டில் ஆஜராகும் போது பின்பற்றும் ஒழுங்குமுறைகளை, வீட்டில் இருந்து வாதாடினாலும் கடைப்பிடிக்க வேண்டும்.பொருத்தமற்ற படங்களை பின்னணியில் காண்பிப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.கொரோனா தீவிரமாக பரவும் சூழலில், வழக்கு விசாரணைகளில், பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள், கண்ணியமான முறையில் உடை அணிவதுடன், கோாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் மரபுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

வருத்தம் தெரிவித்தார்

இதேபோன்ற ஓர் பிரச்னையில், வீடியோ கான்பரன்சிங் விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, உச்ச நீதிமன்றம், 15ம் தேதி கருத்து தெரிவித்து இருப்பதையும், அவர் சுட்டிக் காட்டினார்.இதையடுத்து, தவறை உணர்ந்த வழக்கறிஞர், தன் செயலுக்காக, நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.