இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது
1 min read
Corona impact in India has exceeded 4 lakhs
21-6-2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தண்டியது. நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை ) காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
கடந்த 24 மணி நேரத்தில் அதாவத நேற்ற ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் தற்போது ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
306 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 306 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..
மாநிலம் வாரியாக…
இந்தியா முழுமாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அடைப்புக்குறிக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையும் மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,28,205 (5,984)
தமிழ் நாடு- 56,845 (704)
டெல்லி -56,746 (2,112)
குஜராத்-26,680 (1,638)
உத்தரபிரதேசம்-16,594 (507)
ராஜஸ்தான்-14,536 (337)
மேற்கு வங்காளம்- 13,531 (540)
மத்திய பிரதேசம்-11,724 (501)
அரியானா-10,223 (149)
கர்நாடகா-8,697 (132)
ஆந்திரா 8,452 (101)
பீகார்-7,533 (52)
தெலுங்கானா-7,072(3)
காஷ்மீர்-5,834 (81)
அசாம்-4,904 (9)
ஒடிசா-4,856 (12)
பஞ்சாப் 3,952 (98)
கேரளா-3,039 (21)
உத்தரகாண்ட்-2,301 (27)
சத்தீஸ்கர்-2,041 (11)
ஜார்க்கண்ட்-1,965(11)
திரிபுரா-1,186 (1)
லடாக் – 836(1)
மணிப்பூர்-777(0)
கோவா-754(0)
இமாச்சல பிரதேசம்-656(8)
சண்டிகர்-404(6)
புதுச்சேரி-286(7)
நாகலாந்து-201 (0)
மிஜோரம்-140(0)
அருணாச்சல பிரதேசம்-135(0)