வெளியில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு 8803 பேர் வருகை
1 min read
8803 people visit the Tenkasi district from outside
வெளியில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு 8803 பேர் வருகை
23-6-2020
தென்காசி மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்து மொத்தம் 8803 பேர் வந்துள்ளனர்
தென்காசி
8803 பேர் வருகை
தென்காசி மாட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்திற்கு இதுவரை வெளிநாடுகளில் 204 பேர் வந்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2615 பேர் வந்திருக்கிறார்கள். சென்னையைத் தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 2605 பேர், சென்னையில் இருந்து வந்த 3379 பேர் ஆக மொத்தம் 8803 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர்.
இவர்களில் 7664 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 1139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 14,511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
261 ஆக உயர்வு
தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 31 பேர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 108 பேர்கள் அடங்குவர். கொரோனா பாதிக்கப்பட்டு பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. தற்போது153 பேர் அரசு ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளை வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்தும் இப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.